தனுஷ் கேரக்டரில் நான், எனது கேரக்டரில் தனுஷ்.. பார்த்திபன் கூறிய ஆச்சரிய தகவல்!


Send us your feedback to audioarticles@vaarta.com


தனுஷ் நடிக்க இருந்த கேரக்டரில் தான் நடித்ததாகவும், தான் நடிக்க இருக்கும் கேரக்டரில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் சின்ன பழுவேட்டரையர் என்ற கேரக்டரில் நடித்துள்ள பார்த்திபனின் நடிப்புக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ ரிலீசுக்கு முன், தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று வழிபட்ட பார்த்திபன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் முதலில் நான் நடித்த கேரக்டரில் தனுஷ் தான் நடிக்க இருந்ததாகவும், அதன்பின்னர் தனுஷ்க்கு பதிலாக நான் நடித்தேன் என்று கூறினார்.
மேலும் விரைவில் உருவாக இருக்கும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில், நான் முதல் பாகத்தில் நடித்த கேரக்டரில் தனுஷ் நடிக்க உள்ளார் என்றும் அந்த கேரக்டரில் தனுஷ் என்னை விட நன்றாகவே நடிப்பார் என்றும் அவர் நடித்தால் அந்த கேரக்டர் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். பார்த்திபனின் இந்த தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments