close
Choose your channels

பா ரஞ்சித் இயக்கிய அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு: இன்று மாலை ஒரு ஆச்சரிய அறிவிப்பு?

Wednesday, January 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பா ரஞ்சித் இயக்கிய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து இன்று மாலை ஒரு ஆச்சரிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா ரஞ்சித் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் அவரது அடுத்த படம் ’நட்சத்திரம் நகர்கிறது’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காளிதாஸ் ஜெயராமன், துஷாரா, சபீர் கல்லரக்கல், கலையரசன் உள்பட பலர் நடித்து வந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து பா ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சியான் விக்ரம் நடிக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.