திருமண தினத்திலேயே பிறந்த குழந்தை: நிக்கி கல்ராணி குடும்பத்தினர் டபுள் சந்தோஷம்


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி திருமணம் நடந்த அதே நாளில் நிக்கி கல்ராணி சகோதரிக்கு குழந்தை பிறந்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு , கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான நிக்கி கல்ராணி, நடிகர் ஆதியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். ‘யாகாவாராயினும் நாகாக்க’ உட்பட ஒரு சில படங்களில் இருவரும் இணைந்து நடித்தபோது ஏற்பட்ட காதலை அடுத்து இரு தரப்பு பெரியவர்களின் சம்மதத்தின் பேரில் இந்த திருமணம் நடந்தது.
இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் நிக்கி கல்ராணி-ஆதி திருமண தினத்தில் நிக்கி கல்ராணியின் சகோதரியும் நடிகையுமான சஞ்சனா கல்ராணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஒரே நாளில் நிக்கி கல்ராணியின் திருமணம் மற்றும் அவரது சகோதரிக்கு குழந்தை பிறந்தது என இரண்டு விசேஷங்கள் நடந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.