close
Choose your channels

போர் நடக்கும்போது படமாக்கப்பட்ட பாடல்.. 'நாட்டு நாட்டு' குறித்த அரிய தகவல்!

Thursday, January 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் எம்எம் கீரவாணி இசையில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் கோல்டன் குளோப் விருது பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனையடுத்து படக்குழுவினர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இசைப்புயல் ஏஆர் ரகுமான், இசைஞானி இளையராஜா உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் பிரதமர் மோடி உள்பட பல அரசியல்வாதிகளும் பல குழுவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனார்.

இந்த நிலையில் கோல்டன் குளோப் விருது பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் உக்ரைன் நாட்டின் அதிபர் வீட்டின் முன் எடுக்கப்பட்டதாகவும் இந்த பாடல் படமாக்கப்பட்ட போது ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்ததாகவும் சமீபத்தில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே உக்ரைன் நாட்டிற்கு படப்பிடிப்பிற்காக செல்வதாக ட்வீட் பதிவு செய்திருந்த எஸ்.எஸ் ராஜமவுலி, ‘நாங்கள் படப்பிடிப்பு முடிந்து விட்டு திரும்பிய பிறகு தான் உக்ரைன் நாட்டில் போர் தீவிரமாக நடைபெற்றது என்பதை தெரிந்து கொண்டோம்’ என்றும் கூறியுள்ளார்.

கோல்டன் குளோப் விருது பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் உக்ரைன் அதிபரின் வீடு அருகே படமாக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.