கூப்பிட்டால் போய் நடித்து கொடுப்பேன்.. தமிழில் உருவாகும் மாஸ் படம் குறித்து மோகன்லால்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


மாஸ் திரைப்படமொன்றில் நடிக்க அழைத்தால், தயக்கமின்றி ஒப்புக்கொள்வேன் என்கிற மோகன்லாலின் சமீபத்திய பேட்டி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மோகன்லால் நடிப்பில் உருவான "எம்புரான்" திரைப்படம் வரும் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளதுடன், இதற்கான டிரெய்லர் வெளியான பின்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், படத்தின் விளம்பரத்திற்காக மோகன்லால் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டிகள் அளித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் முன்னணி ஊடகத்திற்கும் பேட்டி அளித்த போது, அவரிடம், "ஜெயிலர்" படத்திற்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் கிடைத்ததா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த உங்கள் அந்த சிறப்பு படத்திற்குப் பிறகு தமிழில் எந்த படத்தில் நடிக்கிறீர்கள்?" என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த மோகன்லால், "நிறைய வாய்ப்புகள் வந்தன, ஆனால் "எம்புரான்" படத்தின் படப்பிடிப்பில் நான் மிகவும் பிஸியாக இருந்ததால் அவற்றில் இணைய முடியவில்லை. தற்போது 'ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அந்த படத்திற்காக என்னை அழைத்தால், கண்டிப்பாக நடித்து கொடுப்பேன்’ என்று கூறினார்.
இந்த பேட்டியை பார்த்து நெல்சன், "ஜெயிலர்" படத்தில் மோகன்லாலுக்கு முதல் பாகத்தில் ஒரு சிறப்பான கேரக்டர் கொடுத்தது போல், இரண்டாம் பாகத்திலும் அவருக்கு ஓர் சிறப்பு கேரக்டரை உருவாக்குவாரா?" என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com