2வது திருமணமா? ஒரே ஒரு புகைப்படம் மூலம் மறைமுகமாக பதிலளித்த மேக்னாராஜ்!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா என்ற கேள்வி ஊடகங்களில் எழுந்து வரும் நிலையில் அந்த கேள்விக்கு மறைமுகமாக ஒரே ஒரு புகைப்படம் மூலம் மேக்னா ராஜ் பதிலளித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகர் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை மேக்னாராஜ், 4 மாத கர்ப்பமாக இருந்தபோது திடீரென சிரஞ்சீவி சார்ஜா மரணமடைந்தார். இதனையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நடிகை மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இதற்கு பதில் கூறிய அவர், ‘ஒரு கூட்டம் இரண்டாவது திருமணம் செய்ய சொல்கிறார்கள் என்றும், இன்னொரு கூட்டம் குழந்தைக்காக வாழச் சொல்கிறார்கள் என்றும், நான் இன்னும் அந்த கேள்வியை எனக்குள் கேட்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும் என் குழந்தையின் எதிர்காலம் பற்றிய சிந்தனையில் இருக்கிறேன் என்றும் இந்த தருணத்தை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று என் கணவர் கூறியதை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார்.
இந்த நிலையில் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் தனது கணவர் மற்றும் மகனின் பெயர்களை டாட்டூ வரைந்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்பதை இந்த புகைப்படம் மூலம் மறைமுகமாக பதில் கூறியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments