நீங்க டல்லே ஆகக்குடாது.. கண்ணீர் விடும் பூர்ணிமாவுக்கு ஆறுதல் கூறும் மாயா..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமா, தன்னை எல்லோரும் கார்னர் செய்கின்றனர் என்று வருத்தத்துடன் கண்ணீர் வடித்துக் கூறும் போது’ நீங்கள் டல்லே ஆகக்கூடாது, உங்களை மாற்றிக் கொள்வதற்கான சான்ஸ் அதிகமாக இருக்கிறது’ என்று மாயா ஆறுதல் கூறுகிறார்.
பிக்பாஸ் போட்டியாளர்களான மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு ஆதரவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்பதும் நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் இருவரையும் சரமாரியாக டோஸ் விட்டார் என்பதும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்கள் தெரிந்திருக்கும்.
இந்த நிலையில் பூர்ணிமா இன்றைய அடுத்த புரமோவில் பேசும்போது, ‘என்னை பற்றி பலரும் பேசும்போது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது, என்னை வேண்டும் என்றே அட்டாக் செய்வது போல் உள்ளது என்று கூறுகிறார்.
அப்போது ’எல்லாவற்றையும் நீங்கள் பர்சனலாக எடுத்துக் கொள்ள வேண்டாம், யாரோ ரெண்டு பேர் உங்கள் மேல் கல் தூக்கி போட்டு இருக்கிறார்கள், அவ்வளவு தான்’ என்று கூறினார்.
அதன் பிறகு பூர்ணிமா ’விஜய் அப்படி சொல்லுகிறதும், அனன்யா அப்படி சொல்லுகிறதும் எனக்கு செம வருத்தமாக உள்ளது, நாமினேஷனில் கூட என்னைப் பற்றி எல்லோரும் தவறாகத்தான் பேசினார்கள், இதுக்கு மேலயும் இதைதானே பண்ணிகிட்டு இருக்க போறன்னு தானே எல்லோரும் நினைப்பார்கள்’ என்று கூற அதற்கு மாயா ’மாத்துவதற்கான சான்சஸ் நிறைய இருக்குது, நீங்கள் டல்லே ஆகக்கூடாது என்று ஆறுதல் சொல்கிறார்.
பூர்ணிமா இதிலிருந்து மீண்டு வந்து வழக்கமான ஆட்டத்தை தொடர்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments