'பராசக்தி' படத்தில் இணைந்தாரா பிரபல மலையாள நடிகர்.. எகிறும் எதிர்பார்ப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ’பராசக்தி’ திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் உள்ளது. தற்போது மேலும் ஒரு பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளதாக கூறப்படுவதால், படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ’பராசக்தி’ திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். ஜிவி பிரகாஷின் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பசில் ஜோசப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது இலங்கையில் நடைபெறும் படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான "பொன்மேன்" என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, அவர் நேரடியாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருப்பது கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, "குருவாயூர் அம்பலத்தில்’ ’ஜெய ஜெய ஜெய ஜெய ஜே" உள்ளிட்ட படங்களில் பசில் ஜோசப் நடித்துள்ளார். இதன் மூலம், தமிழ் ரசிகர்களுக்கு இவர் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com