என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. 2 படங்களையும் அஜித் அவசர அவசரமாக முடிக்க இதுதான் காரணமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குனர் மகிழ் திருமேனி அஜித் கார் ரேஸுக்கு போகும் முன் தன்னிடம் பேசியதாகவும் அப்போது கார் ரேஸில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், அதனால் தான் நான் இரண்டு படங்களின் படப்பிடிப்பை மொத்தமாக முடித்து விட்டேன் என்று கூறியது தனக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது ’கார் ரேஸுக்கு கிளம்புவதற்கு ஒரு இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு அஜித் என்னிடம் பேசினார். அப்போது தான் பயிற்சியில் ஈடுபடும் போது ஏற்பட்ட விபத்து குறித்த வீடியோவை என்னிடம் காட்டினார். அந்த வீடியோவை பார்த்தவுடன் நான் ஆடிப் போனேன். அப்போது அவர் சொன்ன வார்த்தையை என்னால் மறக்கவே முடியாது.
நான் இந்த கார் ரேஸில் கலந்து கொள்கிறேன், அப்போது எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், அதனால் தான் நான் ஏற்கனவே கமிட்டான இரண்டு படங்களின் படப்பிடிப்பை முடித்து விட்டேன். என்னை நம்பி இத்தனை உழைப்பாளர்கள் இருக்கிறார்கள், என்னை நம்பி ஒரு பெரிய தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது, என்னுடைய உழைப்பும் இருக்கிறது, அதனால் தான் என்னுடைய கமிட்மெண்டை முடித்து விட்டேன்.
நான் ஆக்சிலேட்டரை மிதிக்கும் போது 100% மிதிக்க வேண்டும், நான் என்னுடைய கமிட்மெண்டுகளை யோசித்து 90% மிதித்தால், நான் அந்த ரேசுக்கே லாயக்கு இல்லை என்ற அர்த்தம்’ என்று கூறியுள்ளார்.
’விடாமுயற்’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களையும் அவசர அவசரமாக அஜித் முடித்து விட்டதற்கு இதுதான் காரணமா என்ற தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com