16 வயது சிறுவனுடம் சில்மிஷம்.. 'லப்பர் பந்து' நடிகர் போக்சோ சட்டத்தில் கைது..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சென்னையில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்த 16 வயது சிறுவனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்த நடிகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை சீரியல்களில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வரும் ஹரி என்பவர், பூங்காவுக்கு வரும் சிறுவர்களை குறி வைத்து, "நீ அழகாய் இருக்கிறாய், என்னைப் போல் நீயும் புகழ்பெறுவாய்" என்று பேசி, அவரை லவ் பண்ணுவதாக கூறுவாராம். அதன் பிறகு, அத்துமீறி நடந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில், விருகம்பாக்கம் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவனை, " ஐ லவ் யூ டா தம்பி, நீ அழகாக இருக்கிறாய்" என்று கூறி சில்மிஷத்தில் ஈடுபட்ட போது, அந்த சிறுவன் பயந்து தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தான். இதனை அடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த இளைஞன் யார் என்று தேடிவந்தனர்.
மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஹரி என்பது தெரிய வந்த நிலையில், அவரை கைது செய்து விசாரணை செய்தனர். அப்போதுதான், அவர் ‘லப்பர் பந்து’ உள்பட சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளதும், சில சீரியல்களிலும் நடித்துள்ளதும் தெரிந்தது.
மேலும், அவரிடம் விசாரணை செய்தபோது, சின்னத்திரை நடிகைகளிடம் அவர் அத்துமீறி உள்ளார் என்றும், இருப்பினும் தன்னுடைய ஆசையை கட்டுப்படுத்த முடியாததால் சிறுவர் சிறுமிகளிடமும் தவறாக நடந்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com