கார்த்தியின் 'வா வாத்தியாரே' படத்தின் 'உயிர் பத்திக்குமா' பாடல் ரிலீஸ்.. எப்படி இருக்குது?


Send us your feedback to audioarticles@vaarta.com


கார்த்தி நடித்த "வா வாத்தியார்" என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம்பெற்ற "உயிர் பத்திக்காமா" என்ற பாடல் சற்றுமுன் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள "வாத்தியார்" படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான "உயிர் பத்திக்குமா" வெளியாகியுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையில், விவேக் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை விஜய் நரேன், ஆதித்யா ரவீந்திரன், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடியுள்ளனர். முதல் முறை கேட்கும் போது, இந்த பாடல் அசத்தலாக இருக்கிறது என்றும், கண்டிப்பாக இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com