விஷ்ணுவும் பூர்ணிமாவும் மட்டும் தான் போட்டியாளர்களா? கேப்டன்சி டாஸ்க் குறித்து வறுத்தெடுத்த கமல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் கேப்டன் டாஸ்க்கில் விஷ்ணுவை வலுக்கட்டாயமாக கேப்டனாக்க மாயா பூர்ணிமா குரூப் வேலை செய்ததாக குற்றம் தட்டப்பட்டது. இதுகுறித்து கமல்ஹாசன் கேட்கும்போது 'விஷ்ணுவை கேப்டனாக்க இன்புளுயன்ஸ் பண்ணினீர்கள் என்பதுதான் குற்றச்சாட்டு என்று கூறுகிறார்.
அப்போது அர்ச்சனா, ‘மணிக்கு 3 ஸ்டார் இருக்கு, எனவே 3 விஷ்ணுவுக்கு 3 ஸ்டார் இருக்க வேண்டும் என்று சதி செய்தார்கள் என கூறுகிறார். எனக்கு ஸ்டார் கிடைக்காது என்று தெரிந்துவிட்டது அதனால் நான் விஷ்ணுவுக்கு கொடுத்தேன் என நிக்சன் கூறினார்.
இதனை அடுத்து விஷ்ணு பேசியபோது, ‘எனக்கு கேப்டன் ஆக வேண்டும் என்ற மன தைரியம் இருந்தது’ என்று கூறினார். அப்போது கமல்ஹாசன் போட்டியாளர்களே நீங்களும் பூர்ணிமாவும் மட்டும் தானா? கேப்டன்ஷிப் யார் என்று தேர்வு செய்வது, திறமைக்கான பாராட்டை கொடுப்பது இதெல்லாம் விளையாட்டாக செய்யக்கூடாது. அவருக்கு தான் கொடுத்தாச்சு, இவருக்கு கொடுத்து பார்ப்போம் என்று கூறக்கூடாது, ஒவ்வொரு முறையும் தகுதி குறித்து யோசிக்க வேண்டும்’ என்ற கூறினார்.
மொத்தத்தில் விஷ்ணுவை மாயா பூர்ணிமா புல்லிங் குரூப் தான் கேப்டன் ஆக்கி உள்ளது என்று கமல்ஹாசனின் குற்றச்சாட்டு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com