close
Choose your channels

25 ஆண்டுகளுக்கு பின் தாய்மொழியில் மீண்டும் நடிக்கும் ஜோதிகா.. 2 ஹீரோக்கள் யார் யார் தெரியுமா?

Monday, May 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஜோதிகா மும்பையில் பிறந்தவர் என்பதால் ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர் என்பது தெரிந்ததே. அவர் பாலிவுட் திரைப்படமான டோலி சாஜா கே ரக்னா' என்ற படத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் தென்னிந்திய திரைப்படங்களில் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் தான் அதிகம் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 25 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் தனது தாய் மொழியான ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். பிரபல ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்குனர் விகாஸ் பால் என்பவர் இயக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் தான் நடிகை ஜோதிகா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே மாதவன் உடன் ’பிரியமான தோழி’ ’டும் டும் டும்’ ஆகிய படங்களில் நடித்துள்ள ஜோதிகா தற்போது மீண்டும் மாதவன் உடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் நேச்சுரல் திரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.