close
Choose your channels

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சென்ற கார் விபத்து.. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

Friday, December 30, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து அவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் காரில் சென்று கொண்டிருந்தபோதே திடீரென கார், சாலை தடுப்பு மீது மோதி தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் தலையில் படுகாயத்துடன் ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் கிரிக்கெட் வீரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாமல் இருந்த நிலையில் தான் சாலையில் உள்ள தடுப்பு தெரியாமல் ரிஷப் பண்ட் சென்ற கார் மோதியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.