புனித் ராஜ்குமார் பொறுப்பை இனி நான் ஏற்று கொள்கிறேன்: விஷால் அறிவிப்பு!


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற நிலையில் அவருடைய பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என பிரபல தமிழ் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
விஷால், ஆர்யா நடித்த ’எனிமி’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விஷால் பேசியபோது, ‘புனித் ராஜ்குமார் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி தனக்கு ஒரு நல்ல நண்பர் என்றும் அவரைப் போன்ற ஒரு எளிமையான சூப்பர்ஸ்டாரை நான் பார்த்ததில்லை என்றும் கூறினார்.
மேலும் புனித் ராஜ்குமார் 1800 குழந்தைகளின் படிப்பு செலவிற்காக செலவு செய்து வந்தார் என்பதும் அவர் காலமாகி விட்டதை அடுத்து அந்த 1800 குழந்தைகளின் பள்ளிக் கல்வி இனி என்னுடைய பொறுப்பு என்றும் விஷால் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து புனித் ராஜ்குமார் அவர்களின் உதவியால் படித்து வரும் பள்ளி குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கேள்வி எழுந்த நிலையில் விஷால் அதற்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.