ஐஸ் பக்கெட் சேலஞ்ச் பாணியில் சோனாவின் புதிய முயற்சி


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் இணையதளங்களில் வைரலாக பரவியது. உலகம் முழுவதிலும் உள்ள திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் ஐஸ் பக்கெட் சேலஞ்சில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெரும்பாலான மக்கள் உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் கவர்ச்சி நடிகை சோனா 'ரைஸ் பெளல் சேலஞ்ச்' என்று ஆரம்பித்து அதன் மூலம் அரிசியை சேகரித்து வருகிறார்.
தற்போது வரை 175 கிலோ அரிசி சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் 1500 கிலோ அரிசி சேகரித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே தனது குறிக்கோள்' என்றும் சோனா தனது சமூக வலைத்தலத்தில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments