close
Choose your channels

முன்னாள் முதல்வரின் 30 வயது பேத்தி திடீர் தற்கொலை: அதிர்ச்சி காரணம்!

Sunday, January 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதலமைச்சரின் 30 வயது பேத்தி திடீரென தற்கொலை செய்துகொண்ட நிலையில் அந்த தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து உள்துறை அமைச்சர் தகவல் தெரிவித்து உள்ளார்.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மா. இவருடைய 30 வயது மகள் சௌந்தர்யா ஒரு டாக்டர் என்பதும் இவரது கணவரும் ஒரு டாக்டர் என்றதும் பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மல் என்ற பகுதியில் இவர்கள் வசித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

6 மாத குழந்தைக்கு தாயான சௌந்தர்யா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அதற்காக அவர் சிகிச்சை அளித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூட தனது பேத்தியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து அவரது மன அழுத்தத்தை குறைக்கவும், அவர் சந்தோஷமாக இருக்கவும் ஏற்பாடு செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று திடீரென டாக்டர் சௌந்தர்யா தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். சௌந்தர்யாவின் தற்கொலைக்குக் காரணம் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம் தான் என்றும் வேறு எந்த சந்தேகமும் இல்லை என்றும் கர்நாடக மாநில உள்துறை அமைச்சராக அரகா தன்யேந்திரா அவர்கள் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரின் பேத்தி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.