முதல்முறையாக மாயா-பூர்ணிமா மோதல்.. உடைகிறதா புல்லிங் குரூப்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் முதலே பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் நெருக்கமான தோழிகளாக இருக்கின்றனர் என்றும் குறிப்பாக இவர்கள் இருவரும் சில போட்டியாளர்களை தங்களுக்குள் வளைத்துக் கொண்டு புல்லிங் குரூப் ஆரம்பித்து தங்களுக்கு பிடிக்காதவர்களை வெளியேற்றி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் முதல் முறையாக நேற்று பூர்ணிமாவை மாயா நாமினேட் செய்த நிலையில் இன்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பூர்ணிமாவை நோக்கி மாயா ’நிக்சனை நன்றாக காப்பாற்றுகிறீர்கள் என்று கூறுகிறார். நிக்சனுக்கு எதிராக அநீதி நடந்திருக்கிறது, அதனால் நான் காப்பாற்றுகிறேன் என்று பூர்ணிமா கூற, இருவரும் வாக்குவாதம் செய்வதை மற்றவர்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்
’விஷ்ணு மணி அடித்தால் நான் நிக்சனுக்கு எதிரான பாயிண்ட்டை எடுத்து வைக்கிறேன்’ என்று மாயா கூற, அப்போது ’பூர்ணிமாவுக்கு ஓகே என்றால் விஷ்ணு மணி அடிக்க மாட்டார்’ என்று விசித்ரா உசுப்பி விடுகிறார். இதனை அடுத்து பதறிய பூர்ணிமா ’அப்படியெல்லாம் கிடையவே கிடையாது’ என்று கூற விஷ்ணுவும் உடனே மணியை அடிக்கப் போகிறார்.
நிக்சன் மீது விஷ்ணு என்ன குற்றச்சாட்டு வைக்க போகிறார்? மாயா என்ன பாயிண்டுகளை எடுத்து வைக்கப் போகிறார் என்பதை இன்றைய எபிசோடில் தான் பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பூர்ணிமா, மாயா ஆகிய இருவரும் சண்டை போடுவது போல் இருந்தாலும் இருவரும் செல்ல சண்டை தான் போட்டுக் கொண்டனர் என்றும் இருவரும் பிரிய வாய்ப்பு இல்லை என்றும் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments