நிலத்தை சுற்றி சன்னிலியோன் பேனரை வைத்த விவசாயி: காரணம் இதுதான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆந்திராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது விலை நிலத்தை சுற்றி சன்னி லியோனின் ஆளுயர பேனரை வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கினபல்லி சென்சு ரெட்டி என்ற விவசாயி தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் முட்டைகோஸ் காலிபிளவர் உள்பட பல பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். அவருடைய நிலத்தில் மற்ற நிலத்தில் விளையும் பயிர்களை விட மிக நன்றாக விளைச்சல் வருகிறது. இதனால் பலர் அவருடைய நிலத்தைப் பார்த்து பலர் கண் திருஷ்டிபடுவதாக நினைத்தார்.
இதனை அடுத்து தனது நிலத்தின் வழியாக செல்லும் நபர்களின் பார்வை தனது நிலத்தின் மேல் படாமல் இருப்பதற்காக நிலத்தைச் சுற்றி சன்னி லியோனின் ஆளுயர பேனரை வைத்தார். அதிலும் அவர் வைத்துள்ள பேனர்கள் அனைத்திலும் சன்னி லியோன் பிகினி உடையில் இருப்பது போன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து அந்த வழியாக செல்லும் நபர்கள் யாரும் அவருடைய நிலத்தை பார்க்காமல் சன்னி லியோன் படத்தை பார்த்தே கடந்து செல்கின்றனர். அதனால் அவருடைய நிலத்தின் மேல் கண் திருஷ்டி விழுவதில்லை என்று அவர் நம்புகிறார். அவருடைய இந்த ஐடியாவை பார்த்து அனைவரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். சன்னி லியோன் படத்தை பார்ப்பதற்கு என்றே பலர் அந்த வழியாக செல்வதாகவும் கூறப்படுகிறது.
தன்னுடைய நிலத்தில் மேல் கண் திருஷ்டி விழாமல் இருப்பதற்காக சன்னிலியோனின் ஆளுயர பேனரை அவர் கடந்த சில ஆண்டுகளாக வைத்து வந்தாலும் தற்போதுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments