தொடர் நஷ்டம் காரணமாக 'இந்தியன் 3' கைவிடப்படுகிறதா? ரசிகர்கள் அதிர்ச்சி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரித்த படங்கள் தொடர்ச்சியாக எதிர்பார்த்த வெற்றியை தராததால், 'இந்தியன் 3’ படத்தை கைவிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம், ’பொன்னியின் செல்வன்’ இரு பாகங்களுக்குப் பிறகு பெரிய வெற்றி படங்களை எதுவும் தரவில்லை. ’சந்திரமுகி 2’, ’லால் சலாம்’ ’வேட்டையன்’, ’இந்தியன் 2’ ‘விடாமுயற்சி’ ஆகிய படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த வெற்றியையும் லாபத்தையும் பெற முடியவில்லை.
இந்த நிலையில், ’இந்தியன் 3’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து, ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. அந்த பாடல் காட்சிக்காகவும், தனது சம்பளமாகவும் 20 கோடி ரூபாய் வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் கேட்டதாக தகவல் வெளியானது. ஆனால், லைகா நிறுவனம் இதற்கு தயாராக இல்லை என்றும் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக ’இந்தியன் 3’ திரைப்படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டதாக கூறப்படும் நிலையில், தயாரிப்பு தரப்பிலிருந்தோ, ஷங்கர் தரப்பிலிருந்தோ இதுகுறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்தியன் 2’ படத்தை விட, ’இந்தியன் 3’ படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்தது" என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்ததால், இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் இந்த படம் குறித்து பரவும் தகவல்கள் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com