தனுஷ்-ஐஸ்வர்யா மீண்டும் இணைவார்கள்: ரசிகர்களின் நம்பிக்கைக்கு இதுதான் காரணமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தாங்கள் பிரியப்போவதாக தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்தாலும் இருவரும் மீண்டும் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு காரணமாக அவர்கள் முதலில் குறிப்பிடும்போது ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தளத்தில் உள்ள பெயரை மாற்றாததுதான். தனுஷை பிரிவதாக அறிவித்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகியும் அவர் இன்னும் ’ஐஸ்வர்யா ஆர் தனுஷ்’ என்ற பெயரை தனது சமூக வலைத்தளத்தில் இருந்து மாற்றவில்லை. மேலும் டிபி புகைப்படத்தையும் அவர் மாற்றவில்லை.
இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்த போதிலும் சட்டப்படி விவாகரத்து மனுவை தாக்கல் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, ‘தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் நடந்தது கணவன் மனைவிக்கான குடும்ப சண்டை தான் என்றும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இணைந்து வாழ அறிவுறுத்துவோம் என்று கூறியுள்ளதை அடுத்து ரசிகர்களின் நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
சமந்தா உள்பட இதற்குமுன் கணவரை பிரிவதாக அறிவித்த நடிகைகள் அனைவருமே தங்களது சமூக வலைத்தளத்தில் பெயரை மாற்றிய நிலையில் ஐஸ்வர்யா மட்டும் இன்னும் மாற்றாமல் இருப்பது ரசிகர்களுக்கு அவர்கள் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.