மிக்ஜாம் புயல் எதிரொலி: சென்னையில் நாளை திரையரங்குகள் மூடப்படுகிறதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மிக்ஜாம் புயல் எதிரொலியாக நாளை சென்னையில் உள்ள திரையரங்குகளில் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை நோக்கி வந்து கொண்டிருப்பதை அடுத்து சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும், பள்ளி கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஒரு நாள் மட்டும் சென்னையில் திரைப்பட காட்சிகள் ரத்து செய்வது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் பல திரையரங்குகளில் பார்வையாளர்கள் மிகவும் குறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments