கொரோனாவுக்கு பலியான சிஆர்பிஎப் வீரர்: மேலும் பலருக்கு பாதிப்பால் பரபரப்பு


Send us your feedback to audioarticles@vaarta.com


உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மிக வேகமாக பரவி லட்சக்கணக்கான உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் பாமரர் முதல் பதவியில் இருப்பவர் வரை அனைவரையும் பாகுபாடின்றி தாக்கி வருகிறது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தற்போது ராணுவ வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரசால் இன்று சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் பலியாகியுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் சமீபத்தில் மருத்துவமனையில் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிஆர்பிஎஃப் வீரர் ஒருவரே பலியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
டெல்லியில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தது மட்டுமன்றி இதுவரை மொத்தம் 47 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இன்று மட்டும் 12 வீரர்களுக்கு சிஆர்பிஎஃப் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதால் சிஆர்பிஎஃப் வீரர்கள் இடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.