close
Choose your channels
Veeran
TheeraKaadhal

உங்களை அடித்தால் பிரச்சனை வரும்: திடீரென பின்வாங்கிய சிரஞ்சீவி!

Tuesday, December 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வில்லன் நடிகர்களை ஹீரோ புரட்டி எடுக்கும் வகையில் காட்சிகள் அமைப்பதுதான் காலங்காலமாக நடந்து வரும் வழக்கமாக உள்ளது. ஆனால் தற்போது திடீரென வில்லன் நடிகரை முன்னணி நடிகரான சிரஞ்சீவி அடிக்கத் தயங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் திரைப்படம் ’ஆச்சார்யா’. கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முக்கிய வில்லனாக சோனுசூட் நடித்து வருகிறார்.

சிரஞ்சீவி மற்றும் சோனு சூட் மோதும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அப்போது சோனுசூட்டை காலால் உதைக்க வேண்டிய காட்சி ஒன்று படமாக்கப்பட வேண்டும் என்ற நிலையில், சிரஞ்சீவி அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் உதவி செய்து மக்கள் மனதில் ஹீரோவாகியுள்ளவர் சோனுசூட். அவருக்கு தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தினர் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். அப்படி ஒரு இமேஜை பெற்றுள்ள அவரை நான் காலால் அடித்தால் அவரது ரசிகர்கள் என்னை திட்டுவார்கள், அது மட்டுமின்றி ரசிகர்கள் என்னை வெறுக்கவும் செய்வார்கள் என்று கூறி சிரஞ்சீவி அந்த காட்சியில் நடிக்க முடியாது என கூறி விட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து வேறு வழியின்றி அந்த காட்சியை வேறு விதமாக மாற்றி இயக்குனர் படமாக்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் டோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.