சென்னை மெரீனாவுக்கு இனிமேல் செல்ல முடியாது: மாநகராட்சியின் அதிரடி அறிவிப்பு!


Send us your feedback to audioarticles@vaarta.com


இன்று முதல் சென்னை மெரினா கடற்கரை உள்பட சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக நேற்று தமிழகத்தில் 1400 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அவற்றின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரை உள்பட எந்த கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இருப்பினும் சென்னை மெரினாவில் நடைபயிற்சி செல்வதற்கு மட்டும் அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளிலும் தடையை மீறி செல்லும் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளதால் சென்னை மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments