'கேப்டன்' மறைந்த சோகம்.. மனதை தேற்றி கொண்டு மீண்டும் களத்தில் இறங்கிய சண்முக பாண்டியன்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமான நிலையில் அவரது மகன் சண்முக பாண்டியன் தந்தை மறைவை அடுத்து மனதை தேற்றிக்கொண்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேப்டன் விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் ’படைத்தலைவன்’ என்ற படத்தில் நடித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை மற்றும் மறைவு காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தந்தை மறைவை அடுத்து சோகத்தில் இருந்த சண்முக பாண்டியன் தற்போது மனதை தேற்றிக்கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவரே தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
’படைத்தலைவன்’ படம் மட்டுமின்றி ’குற்றப்பரம்பரை’ என்ற வெப் தொடரிலும் சண்முக பாண்டியன் நடித்து வருவதாகவும் அதன் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments