ஹீரோக்கள் நள்ளிரவில் வீட்டுக்கு அழைப்பார்கள்: கமல், ஜாக்கிசான் பட நடிகையின் அதிர்ச்சி பேட்டி!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஹீரோக்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் அழைப்பார்கள் என்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் இல்லாவிட்டால் வாய்ப்பு கிடைக்காது என்றும் கமல்ஹாசன், ஜாக்கிசான் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் மல்லிகா ஷெராவத் வில்லத்தனமான மற்றும் கவர்ச்சிகரமான வேடங்களில் நடிப்பார் என்பதும் கமல்ஹாசன் நடித்த ’தசாவதாரம்’ ஜாக்சன் நடித்த ’தி மித்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சிம்பு நடித்த ’ஒஸ்தி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த மல்லிகா ஷெராவத், ‘ஹீரோக்களின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் தான் தனக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஹீரோக்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகைகளை மட்டும் தான் விரும்புவார்கள் என்றும் எந்த நடிகை அவர்களுடன் சமரசம் செய்து கொள்கிறாரோ அவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்றும், நள்ளிரவு வீட்டுக்கு அழைத்தாலும் செல்ல வேண்டும் என்றும் அப்படி சென்றால் மட்டுமே நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதுபோன்ற நிபந்தனைகளுக்கு நான் உடன்படவில்லை என்பதால்தான் பல பட வாய்ப்புகளை இழந்தேன் என்றும் ஆனாலும் எனக்குரிய ஒரு சில வாய்ப்புகள் கிடைத்து கொண்டுதான் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். மல்லிகா ஷெராவத்தின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments