close
Choose your channels

நித்யாவை தனிமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்

Friday, June 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஐந்து நாட்கள் முடிந்த பின்னரும் இன்னும் சூடுபிடிக்காத நிலையில் தான் உள்ளது. போட்டியாளர்களுக்குள் ஏதாவது சண்டை வந்தால்தான் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் என்னதான் சண்டையை ஆரம்பித்து வைத்தாலும் அது புஸ்வானமாகி வருவதால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய புரமோ வீடியோ மூலம் மீண்டும் மும்தாஜ், நித்யா மோதிக்கொள்வதாக தெரிகிறது. வெங்காயத்தில் ஆரம்பித்த சண்டையை மனதில் வைத்து இன்னும் இருவரும் எதிரும் புதிருமாகவே உள்ளனர்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்த மூன்றாவது புரமோ வீடியோவில் நித்யா தனிமையில் சோகமாக படுத்துள்ளார். அவரை பற்றி மற்ற போட்டியாளர்கள் விவாதித்து வருகின்றனர். குறிப்பாக வைஷ்ணவி, 'நித்யா ஒருவர் தான் இந்த வீட்டில் செலிபிரிட்டி இல்லை என்று தூபம் போடுகிறார்.

இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியா? அல்லது சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியா? என்று கூறும் அளவிற்கு பாலாஜி-நித்யா சண்டையே பிரதானமாக இருப்பதாக் நெட்டிசன்கள் கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.