close
Choose your channels
Veeran
TheeraKaadhal

இப்ப உனக்கு சந்தோஷமா? ஆனந்தக்கண்ணீருடன் மகளை கேட்கும் போட்டியாளர்!

Friday, December 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த தனது மகளிடம் இப்போது உனக்கு சந்தோஷமா? என போட்டியாளர் கேட்கும் காட்சி இன்றைய அடுத்த புரமோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தருகின்றனர் என்பதும் கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களின் குடும்பத்தினரும் வந்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் சஞ்சீவ் குடும்பத்தினர் வருகை தருகின்றனர். சஞ்சீவ் மனைவி மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளே வரும்போது சஞ்சீவ் டாஸ்க்கில் இருந்து வெளியே வராமல் சந்தோசத்தையும் ஆனந்த கண்ணீரையும் அடக்கிக்கொண்டு இருக்கின்றார். அவரது மகள் பின்னாலிருந்து சஞ்சீவ்வை கட்டிப்பிடித்துக்கொண்டு இருந்தபோதும் சஞ்சீவ் டாஸ்க்கில் இருந்து வெளியே வரவில்லை.

அதன்பிறகு பிக்பாஸ் ரிலாக்ஸ் சொன்னவுடன், ‘இப்பொழுது உனக்கு சந்தோஷமா? என கேட்டு தனது மகளை கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் காட்சிகளுடன் இன்றைய புரோமா முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டிற்கு வரவேண்டும் என்று எனது மகள் விரும்புகிறார் என்றும் அதனால் இன்னும் ஒரு வாரம் நான் இருக்க விரும்புகிறேன் என்றும் சஞ்சீவ் ஒரு டாஸ்க்கில் கூறியிருந்தார் என்பதும் அந்த டாஸ்க்கில் ராஜு அவருக்காக விட்டுக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.