குருப்பிஸம், ஃபேவரிஸம்: அர்ச்சனாவின் முகத்திரையை கிழித்த ஆரி
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் சரியாக பெர்பாமன்ஸ் செய்யாத மோசமான போட்டியாளர்களாக அனிதா மற்றும் ஆரி தேர்வு செய்யப்பட்டனர். இதனை அடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைக்குச் செல்வதற்கு முன்னர் ஆரி தன்னிலை விளக்கம் கொடுத்தார்
இந்த வீட்டில் குருப்பிஸம் இருப்பது வெளிப்படையாக தெரிவதாகவும், ஒரு குரூப்பில் இருப்பவர்கள் தங்கள் குரூப்பில் உள்ளவர்களை பாதுகாத்து வருவதாகவும், யார் அப்பாவி என்று பார்த்து அவர்கள் மேல் மோசமான போட்டியாளர் என்று பழியை சுமத்துவதாகவும் கூறினார்
மேலும் ஒரு கட்டத்தில் நேரடியாக அர்ச்சனா மீது நேரடியாக குற்றஞ்சாட்டிய ஆரி, தன்னுடைய குருப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் அவர் அதிக சப்பாத்தி கொடுப்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும் ஆஜித்துக்கு பொங்கல் வழங்கியதாக குற்றம் சாட்டி பிரச்சனையை திசைதிருப்ப முயன்ற அர்ச்சனாவுக்கு பதிலடியும் கொடுத்தார்.
நேர்மையாக இருப்பவர்களையும் தனியாக இருப்பவர்களையும் முதலில் வெளியேற்ற வேண்டும் என அர்ச்சனா குரூப் முடிவு செய்துள்ளதாகவும் நான் வெளியே சென்ற பிறகு யாரை வெளியேற்றுவது என்பதில் அர்ச்சனாவுக்கு சிக்கல் ஏற்படும் என்றும் உண்மையைப் புட்டுப் புட்டு வைத்தார். மேலும் அர்ச்சனா தனது தாய்ப்பாசத்தைக் காட்டி பாலாஜியை தனது பக்கம் இழுத்து கொண்டதையும் அர்ச்சனா தனது ஆதரவாளர்களுக்கு ஃபேவரைட் செய்வதையும் போட்டு உடைத்தார்.
இதனை அடுத்து ஆரி நேர்மையானவர், அவர் சரியாக விளையாடுகிறார் என அவருக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஆதரவு குவிந்து வருகிறது. நேற்று ஆரி குறித்த ஒரு ஹேஷ்டேக் இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது
பாலாஜியிடம் பாசத்தை காண்பித்து அவரை மடக்கிப் போட்டது போல், ஆரியை அவ்வளவு சீக்கிரம் அர்ச்சனா மடக்க முடியாது என்பதும், அவருடைய தாய்ப்பாசம் டிராமா ஆரியிடம் செல்லாது என்றும் தெரிகிறது. இருந்தாலும் வரும் வாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments