close
Choose your channels

அபிஷேக்கின் வைல்ட்-கார்ட் எண்ட்ரி எப்போது?

Wednesday, November 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 45 நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதும் ஒருவர் தானாகவே வெளியேறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வாரமே அதாவது 21 வது நாளிலேயே வெளியேற்றப்பட்டவர் அபிஷேக ராஜா என்பது தெரிந்ததே. முதல் நாளிலிருந்தே போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியவரும், போட்டியாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திவரும் என்று விமர்சனம் செய்யப்பட்ட அபிஷேக் மிக குறைந்த வாக்குகள் எண்ணிக்கையில் 21வது நாளாகவே வெளியேற்றப்பட்டார்.

அபிஷேக் ராஜாவுக்கு ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு இருந்த நிலையில் அவர் வெளியேற்றப்பட்டதில் எந்தவித ஆச்சரியம் இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் அபிஷேக் வெளியேற்றப்பட்ட பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவராசியம் குறைந்து விட்டதாகவும் ஒரு சிலர் கருத்து கூறி வந்தனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் ரீஎன்ட்ரி ஆனது போல் இந்த சீசனில் அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி அபிஷேக் தற்போது தனிமைப்படுத்துதல் காலத்தில் இருப்பதாகவும் அவர் இந்த வாரத்திற்குள் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ரீ என்ட்ரி ஆக இருப்பதாக கூறப்படுகிறது. அபிஷேக் மீண்டும் ரீஎன்ட்ரி ஆனவுடன் பிக்பாஸ் வீடு களைகட்டுமா? அல்லது குழப்பத்தின் உச்சியில் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.