close
Choose your channels

மிகப்பெரிய போராடம் வெடிக்கும்: தியேட்டர் உரிமையாளர்களுக்கு பாரதிராஜா எச்சரிக்கை

Wednesday, May 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய சதவிகித கணக்கு நேற்று வெளியான நிலையில் இந்த திட்டத்திற்கு பாரதிராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்த விகிதாச்சார முறை அமலுக்கு வந்தால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் அடியோடு அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லை என்றாலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு குழு இருப்பதாகவும், அந்த குழுவுடன் ஆலோசித்து எந்த ஒரு முடிவையும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எடுக்க வேண்டும் என்றும் பாரதிராஜா கூறியுள்ளார்.

மேலும் எல்லாவற்றையும் மீறி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டால் இந்த முடிவுகளை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுவார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்' என்று பாரதிராஜா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.