close
Choose your channels
Conjuring Kannappa

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் எப்போது இயங்கும்? வெளியான அறிவிப்பு!!!

Thursday, October 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் எப்போது இயங்கும்? வெளியான அறிவிப்பு!!!

 

நாளை முதல் ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன. இதனால் பெரிய நட்டம் ஏற்பட்டதாகவும் அச்சங்கத்தின் சார்பில் கூறப்பட்டது. மேலும் இந்த இடைப்பட்ட காலங்களுக்கு சாலை வரியை ரத்து செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் பெரும்பாலும் தளர்த்தப் பட்டுள்ளன. எனவே ஆம்னி பேருந்துகளையும் இயக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்ட நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால் நாளை (அக்டோபர் 16) முதல் தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

வருகிற பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு இந்த பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் மத்திய மாநில அரசுகள் வெளியிட்டு உள்ள கொரோனா விதிமுறைகளை முறையாகப் பின்பற்றியே பேருந்துகள் இயப்படும் எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.