மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்.. குவியும் வாழ்த்துக்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் அஜித் குமார் தலைமையிலான ‘அஜித் குமார் ரேசிங்’ அணி, இத்தாலியில் நடந்த முகெல்லோ 12ஹெச் கார் பந்தயத்தில் மூன்றாம் இடத்தை பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நிலையில் அஜித்துக்கும் அவரது அணிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
முன்னதாக, துபாயில் நடைபெற்ற 24ஹெச் சீரிஸ் பந்தயத்தில், இந்தியாவின் பெருமையை உயர்த்தும் வகையில் அஜித் மற்றும் அவரது குழு 911 ஜிடி3 ஆர் பிரிவில் (901) மூன்றாவது இடத்தைப் பிடித்து, ‘ஸ்பிரிட் ஆப் தி கேம்’ விருதையும் பெற்றது. அந்த வெற்றியை அடுத்து அஜித்துக்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று அதாவது மார்ச் 23 அன்று நடைபெற்ற முகெல்லோ 12ஹெச் பந்தயத்திலும் அஜித் குழு பங்கேற்ற நிலையில், ஜிடி992 பிரிவில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
இந்த சாதனையை உற்சாகமாக கொண்டாடிய அஜித், தனது அணியினருடன் இந்திய தேசியக் கொடியை நெகிழ்ச்சியுடன் ஏந்தினார். மேலும், போட்டிக்குப் பிறகு அவரை சந்திக்க வந்த ரசிகர்களுடன் சேர்ந்து வெற்றிக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்தார்.
அடுத்தடுத்து மோட்டார் ரேசிங் போட்டிகளில் தன்னிகரற்ற திறமையை வெளிப்படுத்தி வரும் அஜித் குமார் குழுவிற்கு திரையுலகத்திலும் ரசிகர்களிடமும் பல்வேறு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com