திரையுலக ஜாம்பவான்களுடன் செல்பி.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த புகைப்படம்!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரை உலகின் இரண்டு ஜாம்பவான்களுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.
தமிழ் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் ஆகிய இருவருடன் எடுத்த செல்பி புகைப்படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் அவர், ‘இரண்டு அற்புதமான மனிதர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும்போது நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக நிச்சயம் உணர்வோம் என்று கூறியுள்ளார்.
ஒரு புகைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஏஆர். ரகுமான் இருப்பது போன்றும் இன்னொரு புகைப்படத்தில் ஏஆர் ரகுமான் எடுத்த செல்பியில் ரஜினிகாந்த் மற்றும் அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ’லால் சலாம்’ என்ற படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் கிரிக்கெட் வீரர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments