close
Choose your channels

10 ஆண்டுக்கு பின் மீண்டும் விஜய் படத்தில் இணையும் நடிகை.. 'ஜனநாயகன்' அப்டேட்..!

Saturday, February 8, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2015 ஆம் ஆண்டு வெளியான விஜய் படத்தில் நாயகியாக நடித்த நடிகை, 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அவர் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படம் ’ஜனநாயகன்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ’புலி’ என்ற திரைப்படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், ஸ்ருதி ஹாசனின் கேரக்டர் பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’ஜனநாயகன்’ திரைப்படத்தில், ஸ்ருதிஹாசன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ’ஜனநாயகன்’ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மமீதா பாஜு, மோனிஷா, வரலட்சுமி சரத்குமார், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட நடிகைகளும் இதில் நடிக்கின்றனர். அந்த வகையில், தற்போது ஸ்ருதிஹாசனும் இணைந்துள்ளதால், இந்த படம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அனிருத் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை, சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் KVN புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment