10 ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் நடிகர் அப்பாஸ்.. மீண்டும் ஒரு சுற்று வருவாரா?


Send us your feedback to audioarticles@vaarta.com


ஒரு காலத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்த அப்பாஸ், 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ-என்ட்ரி ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கதிர் இயக்கத்தில் உருவான ’காதல் தேசம்’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் அப்பாஸ். அதன் பிறகு ’விஐபி’, ’பூச்சுடவா’, ’பூவேலி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் சரியான கதைகளை தேர்வு செய்யாததால் தொடர்ந்து தோல்வியடைந்த படங்களை கொடுத்தார்.
இதனை அடுத்து, ரஜினியுடன் ’படையப்பா’, கமல்ஹாசனுடன் ’பம்மல் கே சம்பந்தம்’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர், திரையுலகிலிருந்து காணாமல் போனார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ’ராமானுஜன்’ என்ற தமிழ் படத்திலும், 2015-ஆம் ஆண்டு ஒரு மலையாள படத்தில் நடித்த பின்னர், அவர் வேறு திரைப்படங்களில் நடிக்கவில்லை.
இந்த நிலையில், 10 ஆண்டுகள் கழித்து நடிகர் அப்பாஸ் திரையுலகிற்கு மீண்டும் வருகிறார். புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில், சற்குணம் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய வெப் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடிக்க உள்ளார். ’எக்ஸாம்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த தொடர், அப்பாஸ்க்கு சிறந்த ரீஎண்ட்ரி ஆக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், இந்த தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com