அப்ப அது ரம்பா தொடையே இல்லையா? 25 வருடங்கள் கழித்து உண்மையை உடைத்த இயக்குனர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் மற்றும் ரம்பா நடித்த பாடல் காட்சி ஒன்றில் ரம்பா இல்லாமலேயே படமாக்கியதாக இயக்குனர் 25 வருடம் கழித்து உண்மையை உடைத்து உள்ள நிலையில் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் செல்வபாரதி இயக்கத்தில் விஜய், ரம்பா, தேவயானி நடிப்பில் உருவான திரைப்படம் ’நினைத்தேன் வந்தாய்’. கடந்த 1998ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் இடம்பெற்ற ’வண்ண நிலவே’ என்ற பாடலில் விஜய் மற்றும் ரம்பா நடித்திருந்த நிலையில் இந்த பாடலில் பெரும்பாலான காட்சிகளில் ரம்பா நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக ஜூனியர் ஆர்ட்டிஸ்டை வைத்து படமாக்கப்பட்டதாகவும் இயக்குனர் செல்வபாரதி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்
இந்த பாடலை கடைசியாக நான் எடுத்தபோது ரம்பா வேறொரு படத்தில் கமிட்டாகி சென்று விட்டார் என்றும் அவர் வரவில்லை என்பதால் ஜூனியர் நடிகை ஒருவரை வைத்து தான் அந்த பாடலை எடுத்ததாகவும் அந்த பாடலின் பல ஷாட்டுகளில் முகத்தை காட்டாமல் எடுத்து இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் ’அந்த பாடலில் நாங்கள் பார்த்தது ரம்பா தொடை இல்லையா என்று கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments