close
Choose your channels
Conjuring Kannappa

சமந்தா, த்ரிஷாவை அடுத்து பாங்காக் தெருக்களில் ஜாலி மூடில் அஞ்சலி.. வைரல் புகைப்படங்கள்..!

Sunday, October 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக சமந்தா மற்றும் த்ரிஷா வெளிநாடுகளில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது பாங்காக் சென்று இருக்கும் நடிகை அஞ்சலியும் அந்நாட்டில் உள்ள தெருக்களில் ஜாலி மூடில் இருந்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



தமிழ் திரை உலகில் ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அஞ்சலி அதன் பிறகு ’அங்காடி தெரு’, ’மங்காத்தா’ ’எங்கேயும் எப்போதும்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேம் சேஞ்சர்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.



இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சலிக்கு சுமார் இரண்டு மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். இதனை அடுத்து அவர் சமீபத்தில் பாங்காங் சுற்றுலா சென்ற நிலையில் அங்கு உள்ள தெருக்களில் ஜாலியாக நடந்து செல்வது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.