குஷ்புவை அடுத்து பிரபல நடிகையின் பூஜையில் கலந்து கொண்ட ரம்பா: வைரல் புகைப்படங்கள்


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் கனவு கன்னியாக இருந்த நடிகை ரம்பா சமீபத்தில் நடிகை குஷ்புவை தனது குழந்தைகளுடன் சந்தித்தார் என்பதும், இரண்டு நடிகைகளின் குழந்தைகளும் சந்தித்த இந்த சந்திப்பின் புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகை சினேகா மற்றும் அவரது குடும்பத்தினரை ரம்பா தனது குழந்தைகளுடன் சந்தித்து உள்ளார். வரலட்சுமி விரதத்தை அடுத்து நடிகை சினேகா தனது வீட்டில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்த நிலையில் ரம்பா இந்த பூஜையில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் ரம்பா பதிவு செய்துள்ளதோடு, சினேகாவின் வீட்டில் நடந்த பூஜையில் கலந்து கொண்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. மேலும் இந்த பூஜை குறித்த புகைப்படங்களை சினேகாவும் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.