ஹனிமூன் முடிந்த அடுத்த நாளே படப்பிடிப்பு: நயன்தாரா எங்கே சென்றார் தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நிலையில் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார் என்பதும் அங்கு இருவரும் ஹனிமூனை சிறப்பாக கொண்டாடினார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் நேற்று ஹனிமூன் முடிந்து நாடு திரும்பியுள்ளதாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில் கூறியுள்ள நிலையில், ஹனிமூன் முடிந்த அடுத்த நாளே நயன்தாரா படப்பிடிப்பிற்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ’ஜவான்’ படத்தின் படப்பிடிப்பில் தான் நயன்தாரா கலந்து கொண்டார் என்றும் 20 நாட்களுக்கு மும்பையில் தங்கியிருந்து இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒருசில ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பாடல் காட்சிக்காக ஷாருக்கானுடன் வெளிநாட்டுக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஷாருக்கானின் ’ஜவான்’ திரைப்படம் தவிர ’கோல்டு’ ’இறைவன்’ ’காட்பாதர்’ மற்றும் ’கனெக்ட்’ ஆகிய நான்கு திரைப்படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments