close
Choose your channels
Veeran
Kaadhar
Porthozhil

தோனியை அடுத்து திரையுலகில் அடியெடுத்து வைக்கும் மற்றொரு சிஎஸ்கே வீரர்..!

Tuesday, March 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டமான தோனி சமீபத்தில் திரையுலகில் அடி எடுத்து வைத்தார் என்பதும் அவர் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் தமிழ் திரைப்படம் என்பதையும் பார்த்தோம். ’எல்ஜிஎம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார் என்பதும் இந்த படத்தின் நாயகனாக ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தில் யோகி பாபு உட்பட பல நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின்றது.

இந்த நிலையில் தோனியை அடுத்து மற்றொரு சிஎஸ்கே வீரரான ஜடேஜாவும் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்திருப்பதாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது. இவர் ’Pachhattar Ka Chhora’ என்ற இந்தி படத்தை முதன் முதலில் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரந்தீப் ஹூடா மற்றும் நீனா குப்தா முக்கிய வேடங்களில் நடிக்க இந்த படத்தை ஜெயந்த் என்பவர் இயக்கவுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர்கள் அடுத்தடுத்து திரை உலகில் தயாரிப்பாளர்களாக களம் இறங்கி வருவது திரை உலகில் பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.