ரஜினி தப்பித்துவிட்டார், தூண்டிலில் விஜய் சிக்கிவிட்டார்: அதிமுக செய்தி தொடர்பாளர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ரஜினியை கட்சி ஆரம்பிக்க சொல்லி பாஜக வலியுறுத்தியது என்றும் ஆனால் ரஜினி தப்பித்துவிட்டார் என்றும் பாஜகவின் தூண்டிலில் விஜய் சிக்கிவிட்டார் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தளபதி விஜய் நேற்று அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததோடு தனது கட்சியின் பெயரையும் தமிழக வெற்றி கழகம் என்று அறிவித்தார். இதனை அடுத்து அவரது கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி விரைவில் தொடங்கும் என்றும் அவரது கட்சி தேர்தல் ஆணையத்தில் விரைவில் பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் சமீபத்தில் அனைத்து பேட்டியில் விஜய்யின் அரசியல் குறித்து கூறியுள்ளார்
’தமிழ்நாட்டில் வளர்ந்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியில் பாஜக உள்ளது என வெளிப்படையாக தெரிகிறது. ரஜினிகாந்தை கட்சி தொடங்க சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால் அவர் தப்பித்துவிட்டார். அடுத்த தூண்டில் விஜய் தான். தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற திரைத்துறையில் இருந்து ஒரு முகம் தேவை என பாஜக நினைக்கிறது. அந்த தேவையை விஜய் பூர்த்தி செய்வார் என நம்புகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments