23 ஆண்டுகள் ஆகிவிட்டது.. இன்னும் உன்னை தேடி கொண்டிருக்கிறேன்: சிம்ரன் நெகிழ்ச்சியான பதிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை சிம்ரனின் சகோதரியான நடிகை மோனல் காலமாகி 23 ஆண்டுகளை கடந்துள்ளது. இதையடுத்து, "இன்னும் உன்னை என் மனதில் தேடிக்கொண்டிருக்கிறேன்" என்று சிம்ரன் தனது சமூக வலைதளத்தில் உருக்கமான ஒரு பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை மோனல், "பார்வை ஒன்றே போதுமே" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர், விஜய் நடித்த பத்ரி, சரத்குமார் நடித்த சமுத்திரம், சத்யராஜ் நடித்த விவரமான ஆளு, பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி, மோனல் தன்னுடைய அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். நடன இயக்குனர் ஒருவர் மீது கொண்டிருந்த காதல் தோல்வி காரணமாகவே அவர் தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று, மோனல் காலமாகி 23 ஆண்டுகள் ஆனதை அடுத்து, சிம்ரன் தனது சமூக வலைதளத்தில் ஒரு உருக்கமான பதிவு பகிர்ந்துள்ளார். அதில், "ஒரு நாளும் உன் நினைவில்லாமல் இருந்ததே இல்லை, மோனல்... 23 ஆண்டுகள் ஆனாலும், இந்த அமைதியான தருணங்களில் உன்னுடைய நினைவலைகளை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் #SisterLove #GoneButNotForgotten ஆகிய ஹேஷ்டேக்குகளையும் பதிவு செய்துள்ளார்.
இப்பதிவு வைரலாகி வரும் நிலையில், பலரும் சிம்ரனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Not a day goes by without a thought of you, Monal. 23 years, and I still look for pieces of you in the quiet moments 💔#SisterLove #GoneButNotForgotten
— Simran (@SimranbaggaOffc) April 14, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com