close
Choose your channels

12 வருடம் கழித்து சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்கும் அஜித் பட நாயகி!

Monday, November 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் பொன்குமரன் இயக்கத்தில் நடிகர் ஜீவா மற்றும் சிவா கூட்டணியில் உருவாக இருக்கும் “கோல்மால்“ திரைப்படத்தின் மூலம் நடிகை மாளவிகா மீண்டும் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

தல அஜித் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான “உன்னைத்தேடி“ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதற்குப் பிறகு “ஆனந்த பூங்காற்றே“, “வெற்றிக்கொடி கட்டு“ போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் இவர் அறியப்படும் நடிகையாக இருந்துவந்தார்.

நடிகை மாளவிகா தனது திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் நடித்துவந்தார். இறுதியாக “குருவி“ படத்தில் நடித்த அவர் கர்ப்பமானதால் பட வாய்ப்புகளை மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது 2 குழந்தைகளுக்கு தாயான அவர் 12 வருடம் கழித்து மீண்டும் “கோல்மால்“ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜாகுவார் ஸ்டுடியோஸ் வினோத் ஜெயின் தயாரிப்பில் பொன்குமரன் இயக்கத்தில் உருவாகும் கோல்மால் திரைப்படம் வரும் டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.