நடிகை லைலாவுக்கு மல்லிகைப்பூ கொடுத்தது யார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்!


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை லைலாவுக்கு தமிழ்நாட்டு பெண் ஒருவர் மல்லிகைப்பூ கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
விஜயகாந்த் நடித்த ’கள்ளழகர்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் ’முதல்வன்’ ’பார்த்தேன் ரசித்தேன்’ ’தில்’, ‘மௌனம் பேசியதே’, ‘பிதாமகன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லைலா. இவரது கன்னக்குழி சிரிப்பிற்கே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை லைலா கடந்த 2006ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்தபின் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. லைலாவுக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பதும் சமீபத்தில் தனது இரண்டு மகன்களுடன் கூடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் லைலா தமிழ் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். பிரசாந்த் நடித்துவரும் ’அந்தகன்’ என்ற திரைப்படத்திலும், கார்த்தி நடித்து வரும் ’சர்தார்’ என்ற திரைப்படத்திலும் அவர் தற்போது நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் லைலா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் தனக்கு தமிழ்நாட்டு பெண் ஒருவர் மல்லிகைப்பூ கொடுத்த புகைப்படங்களை பதிவுசெய்துள்ளார். தமிழக மக்கள் எப்போதும் அன்பானவர்கள் என்றும் தமிழ் குடும்பங்கள் மிகவும் அன்பு செலுத்துபவர்கள் என்றும் எனக்கு மல்லிகைப்பூ கொடுத்த இந்த பெண்ணுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். லைலா மல்லிகைப்பூவுடன் உள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments