கிரிக்கெட் போட்டி டிக்கெட்டை திருடிவிட்டார்.. டெலிவரி பாய் மீது குற்றச்சாட்டு கூறிய நடிகை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நேற்று நடந்த இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை டெலிவரி பாய் திருடி விட்டதாக பிரபல நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியை காண இரண்டு டிக்கெட்டுகளை வாங்கி வைத்திருந்ததாகவும் அந்த டிக்கெட்டுகளை தனது நண்பரின் தந்தைக்கு ஸ்விக்கி நிறுவன ஊழியர் மூலம் கொடுத்து அனுப்பி வைத்தோம் என்றும் ஆனால் அந்த டிக்கெட்டுகளை அவர் டெலிவரி செய்யாமல் திருடிவிட்டு தப்பித்து ஓடிவிட்டார் என்றும் இதுகுறித்து புகார் அளித்தும் ஸ்விக்கி நிறுவனம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் காவல்துறையினரால் கூட உதவ முடியவில்லை என்றும் எனவே டிக்கெட்டுக்களை என்னால் மீட்க முடியவில்லை என்றும் அந்த திருடனை பற்றிய அனைத்து விவரங்கள் ஸ்விக்கியில் இருந்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு தரவில்லை என்றும் அவர் பதிவு செய்துள்ளார். அவரது இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments