கூட்டம் கூடுவதற்கும் குவாலிட்டிக்கும் சம்பந்தம் இல்லை: 'புஷ்பா 2' குறித்து தமிழ் நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவரும் நிலையில், கூட்டம் போடுவதற்கும் குவாலிட்டிக்கும் சம்பந்தமில்லை என ’புஷ்பா 2 ’படம் குறித்து தமிழ் நடிகர் ஒருவர் விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சித்தார்த் சமீபத்தில் அளித்த பேட்டியில், அல்லு அர்ஜுனுக்கு கூடிய கூட்டம் மற்றும் ’புஷ்பா 2 ’ படத்தை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவரை பேட்டி எடுத்த தொகுப்பாளர், ’அல்லு அர்ஜுனை பார்க்க பாட்னாவில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூட்டியிருந்தது என்று கேட்டதற்கு, "கூட்டம் போடுவதெல்லாம் ஒரு விஷயமா? அதுவும் இந்தியாவில் ஜேசிபியை கொண்டு வந்து நிறுத்தினால் கூட கூட்டம் கூடிவிடும். பீகாரில் கூட்டம் கூடுவது பெரிய விஷயம் இல்லை. இந்தியாவில் கூட்டம் கூடுவதற்கும் குவாலிட்டிக்கும் சம்பந்தமில்லை."
அப்படி பார்த்தால் எல்லா அரசியல் கட்சிக்கும் கூட்டம் கூடுகிறது, எல்லா அரசியல் கட்சியும் ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டுமே. எங்கள் காலத்தில் சொல்வதென்றால், "பிரியாணிக்கும் குவாட்டர் பாட்டிலுக்கும் கூட கூட்டம் கூடும். என்று சொல்வார்கள்’ என்று கூறினார்.
எல்லோருக்கும் தான் கூட்டம் கொடுக்கிறது என்று பேசி இருக்கும் சித்தார்த்தின் இந்த கருத்து, அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கோபமாக பதிலடி கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments