close
Choose your channels

அன்னை இல்லம் மீது பிறப்பித்த ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.. ஏனெனில்.. பிரபு மனுதாக்கல்..!

Friday, March 28, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்த அன்னை இல்லம் வீட்டை சமீபத்தில் நீதிமன்றம் ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தது. இந்த வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து நடிகர் பிரபு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சிவாஜி கணேசன் மூத்த மகன் ராம்குமாரின் மகன் துஷ்யன், ’ஜகஜால கில்லாடி" என்ற படத்தை தயாரித்த போது 3.75 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்த கடனை திருப்பி செலுத்தாததால் வழக்கு தொடரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை அடுத்து, ராம்குமார் "அன்னை இல்லம் என் வீடு அல்ல, இது என் தம்பி பிரபுவின் வீடாகும்" எனக் கூறி, இந்த நடவடிக்கையை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்தார்.

தற்போது, பிரபுவும் இதுகுறித்து மனு தாக்கல் செய்துள்ளார். "என் தந்தை சிவாஜி கணேசன் உயிரோடு இருந்தபோது, அன்னை இல்லம் எனது பெயரில் உயில் எழுதப்பட்டது. எனது சகோதரர், சகோதரிகளும் இதற்கு ஒப்புதல் வழங்கியிருந்தனர். எனவே, எனது சகோதரர் ராம்குமார் தொடர்புடைய நிதி பிரச்சனையில், எனக்கு சொந்தமான வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன், ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment