இன்று சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் டி.ராஜேந்தர்: அவருக்கு என்ன தான் பிரச்சனை?


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான டி ராஜேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரலானது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் டி ராஜேந்தர் விரைவில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்பு அமெரிக்கா சென்று டி ராஜேந்தரின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில் டி ராஜேந்தருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர் என்றும் வயிற்றுப்பகுதியில் ரத்தக்கசிவு இருப்பது தெரிய வந்தது என்றும் இதற்கு சிகிச்சை செய்து கொள்வதற்குதான் டி ராஜேந்தர் தற்போது அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று அமெரிக்கா செல்லும் டி ராஜேந்தர் சிகிச்சை முடிந்து இன்னும் சில நாட்களில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிம்பு நடித்துவரும் ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு இதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், சிம்பு சென்னை திரும்பியதும் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதேபோல் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சிம்பு சென்னை திரும்பியபின் தான் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.